நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் "கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் விமான சேவை வரும் 19ம் தேதி வரை ரத்து"

0 1333

நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் வரும் 19ம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்றும் கோ ஃபர்ஸ்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் உடனடி தீர்வு மற்றும் செயல்பாடுகளின் மறுமலர்ச்சிக்காக தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கோ ஃபர்ஸ்ட் நிர்வாகம், விரைவில் முன்பதிவுகளை மீண்டும் தொடங்குவோம் எனக் கூறியள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments